வவுனியா மன்னார் வீதியில் கிளைமோர் தாக்குதல்
Read Time:51 Second
வவுனியா மன்னார் வீதியில் 10 ஆம் 11ஆம் மைல் கல்லுக்கிடைப்பட்ட பகுதியில் நேற்று (30.05.2006) காலை 7.00 மணியளவில் புலிகளினால் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.