கிழக்கில் 13 சிங்களவர்கள் சுட்டுக்கொலை
Read Time:53 Second
கிழக்கு மாகாணத்தில் 13 சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவி;த்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கட்டடத் தொழி லாளர்களெனத் தெரியவருகிறது. நேற்றுத் தி;ங்கட்கிழமை 15 கட்டடத்தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களில் 13பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் கடுங்காயங்களுடன் தப்பியோடியதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகளிற்கு விடுதலைப் புலிகள் மீது சிங்கள இராணுவம்; பழி சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.