புலிகளுக்கும் நித்யானந்தாவிற்கும் தொடர்பு காணப்பட்டதா என அமெரிக்கா விசாரணை?
Read Time:1 Minute, 22 Second
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சுவாமி நித்யானந்தாவிற்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதா என அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆசியன் ட்ரிபியூன் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கும் நித்யானந்தாவிற்கும் இடையில் தொடர்பு காணப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. நித்யானந்தாவிற்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு முகவர் நிறுவனம் நித்யானந்தா விசாரணைகள் தொடர்பில் தகவல்களை திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு எவ்வாறு நிதி கிடைத்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating