இலங்கைத் தமிழர்களுக்காக மாணவி தற்கொலை
Read Time:54 Second
இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனி ஈழம் அமைக்கக் கோரியும், தமிழக மாணவர்களின் போராட்டங்களை வலுப்படுத்தக் கோரியும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 18 வயதான எத்திராஜ் கல்லூரி மாணவி சு .கௌதமி (ராசாத்தி) தற்கொலை செய்துள்ளார். இவர் நேற்றுமாலை தனது அறையில் தனிமையில் இருந்தவேளை தனது துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கு முன்னதாகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தைச் செர்ந்த மூவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளனர்.
Average Rating