15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட் படுத்திய மீனவர்
Read Time:1 Minute, 12 Second
வெலிகம அபிமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மீனவரொருவரை ஆறு வருடங்களின் பின்னர் கடந்த 25 ஆம் திகதி வெலிகம பொலிஸார் கைது செய்தனர்.
சிறுமியின் தந்தை 2006 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி தமது 15 வயது மகள் கடத்தப்பட்டுவிட்டதாக முறைப்பாடு செய்திருந்தார். அதன் பின்னர் சந்தேகநபரையோ சிறுமியையோ தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கைதுசெய்யப்படும்போது சந்தேகநபரான மீனவர் தான் கடத்திய சிறுமியை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தந்தைதெரி வித்துள்ளார்.
28 வயதான இந்த மீனவரை நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய வெலிகம பொலிஸார் நடவடிக்கை மேறகொண்டுள்ளனர்.
Average Rating