அநுராதபுரம் ஆற்றுப் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
Read Time:43 Second
அநுராதபுரம், மிஹிந்தலை, மஹகனந்தராவ ஆற்றுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீ்கப்பட்டுள்ளது. மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதான திருகோணமலை, மிஹிந்தலை பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நபர் கடந்த மார்ச் 30ம் திகதியிலிருந்து காணாமற் போனவர் என பொலிஸாரது விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
Average Rating