ஊர்காவற்துறையில் இரண்டு சடலங்கள் மீட்பு..!!
Read Time:1 Minute, 0 Second
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை சாட்டி கடற்பரப்பில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சடலங்கள் நேற்றையதினம் மீட்கப்பட்டதாக ஊர்காவற்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நேற்று முன்தினம் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
புங்குடுத்தீவு 10ஆம் வட்டார பிரதேசத்தில் மீட்கப்பட்ட குறித்த சடலம் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating