ஜப்பானில் 73 வயது நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
Read Time:1 Minute, 17 Second
ஜப்பானில் படுகொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 73 வயது நபரொருவருக்கு வியாழக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டில் டோக்கியோவில் உணவகமொன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்று அவரிடமிருந்த 400இ000 யென் (4000 அமெரிக்க டொலர்) பணத்தை களவாடிய குற்றச்சாட்டிலேேய மேற்படி நபருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சு தெரிவித்தது.
அவரது மரணதண்டனை நிறைவேற்றத்துடன் இந்த வருடம் ஜப்பானில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருவருக்கும் பெப்ரவரி மாதத்தில் மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்நாட்டில் தற்போது 132 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.
Average Rating