எம். பிக்களான மாவை, சுரேஷ், சரவணபவன் ஊர்வலத்தில் பங்கேற்காது ஒதுங்கினர்!
Read Time:1 Minute, 8 Second
வடமாகாண சபையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட போதிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊர்வலங்களில் பங்கேற்காது ஒதுங்கி நின்றதைக் காண முடிந்தது.
மாவை சேனாதிராசா, சரவணபவன், சுரேஷ் பிரேம ச்சந்திரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது ஓரமாக நின்றனர்.
வட மாகாண சபையின் உயர் பதவிகளில் உள்ளவர்கள் அவர்களை ஊர்வலத்தில் கலந்து கொள்ளும்படியும், மாலைகளை ஏற்கும்படியும் விடுத்த வேண்டுதல்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், இரா. சம்பந்தன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்
Average Rating