இளம் பெண்ணை பேஸ்புக்கில் மனைவியாக சித்தரித்த நபர் தமிழகத்தில் கைது
Read Time:1 Minute, 3 Second
திருமணம் நிச்சயமான இளம்பெண்ணை பேஸ்புக்கில், மனைவியாக சித்தரித்த எம்.பி.ஏ., பட்டதாரியை பொலிசார் கைது செய்தனர்.
திருப்பூர், போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் 25; எம்.பி.ஏ., பட்டதாரி.
தனியார் தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
குப்பாண்டம் பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமானது. ஆத்திரமடைந்த, யோகேஸ்வரன் பேஸ்புக்கில் பெண்ணை தன் மனைவியாக சித்தரித்து, தகவல் வெளியிட்டார்.
இதுகுறித்து பொலிசார், வழக்குப் பதிந்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Average Rating