குரங்கை காப்பாற்ற முயன்ற சாரதி பலி
Read Time:1 Minute, 11 Second
பிரதான வீதிக்கு பாய்ந்த குரங்கை காப்பாற்றுவதற்கு முயன்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் பரிதாபகரமாக மரணமாக சம்பவமொன்று அவிசாவளையில் இன்று இடம்பெற்றுள்ளது.
அவிசாவளை, கொட்டஹேர எனுமிடத்தில் குரங்கொன்று பிரதான மரத்திலிருந்து வீதிக்கு பாய்ந்துள்ளது.
முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற சாரதி, அந்த குரங்கை காப்பாற்றுதவதற்கு முயற்சித்த போதே அந்த முச்சக்கரவண்டியுடன் மோதி அவர் விபத்துக்குள்ளானார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் குறித்த சாரதி பலியானதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் குறித்த குரங்கும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating