சுற்றிவளைப்புக்குள் வன்னி சுகந்திரபுரம்; பலர் கைது
Read Time:1 Minute, 12 Second
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகந்திரபுரத்தினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளதாக பிரதேச பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு முதல் சுகந்திரபுரத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய இராணுவத்தினர் இன்று காலை பிரதேசத்திலுள்ள அனைத்து இளைஞர்களையும் பொது இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று துருவித் துருவி விசாரணை நடத்தியள்ளனர்.
அதன் பின்னர்அதிலிருந்து 8 பேரை மேலதிக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று மாலை 300 அதிகமான இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தில் குவிக்கப்பட்டு காணப்படுவதால் இன்று இரவும் சோதனை நடவடிக்கைகளும் ,கைதுகளும் தொடரும் என பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
Average Rating