‘பேஸ்புக்’ தோழியுடன் கணவன் ஓட்டம்; கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார்!
கோவை: கோவையில், சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்‘ மூலம் பழக்கமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவனை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆரம்பபாடசாலை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் வடவள்ளியில் உள்ள ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜென்டாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் மற்றும் 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். மணிகண்டனுக்கு சமூக வலைதளமான ‘பேஸ்புக்‘மூலம் அதேபகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ராஜலட்சுமி கணவன் மணிகண்டனை கண்டித்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், கடந்த மாதம் பொள்ளாச்சியில் நடந்த நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு சென்று வருவதாக மனைவி ராஜலட்சுமியிடம் கூறிவிட்டு மணிகண்டன் சென்றார்.
ஆனால், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், மணிகண்டன் எழுதி வைத்திருந்து கடிதம் ஒன்று வீட்டில் சிக்கியது.
அதில், ‘குடும்ப தகராறு காரணமாக மனைவியுடன் வாழ பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்‘ என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தநிலையில், ஆலந்தூர் போலீசில் ராஜலட்சுமி புகார் அளித்தார். அந்த மனுவில், ‘‘எனது கணவர் மணிகண்டன் ‘பேஸ்புக்‘ மூலம் ஒரு பெண்ணை காதலித்தார். அவருடன் சேர்ந்து மாயமான எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
Average Rating