கணவரை தாக்கி மனைவியிடம் நகை பறித்த கும்பல்!!

Read Time:1 Minute, 43 Second

e7948edc-7088-4e59-b81d-5a75e95d4260_S_secvpfதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாலமுத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 31). இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருடய மனைவி வினோதினி (21). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்தனர். பின்பு அவர்கள் தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

தஞ்சையை அடுத்த மடிகை அருகே சென்றபோது, இவர்களுக்கு பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென வழிமறித்தனர். இதனால் மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் நிறுத்தினார். அப்போது 2 பேர் கார்த்திகேயனை தாக்கியதுடன் அவரை பிடித்து கொண்டனர். மற்ற 2 பேர் வினோதினியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். பின்பு 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கார்த்திகேயன் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற 4 பேரை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து சரமாரி தாக்குதல்!!
Next post ஆபாச படம் எடுத்து வாலிபர்கள் மிரட்டல் வழக்கில் கேரள அழகிகள் கைது!!