கணவரை தாக்கி மனைவியிடம் நகை பறித்த கும்பல்!!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாலமுத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 31). இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருடய மனைவி வினோதினி (21). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்தனர். பின்பு அவர்கள் தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
தஞ்சையை அடுத்த மடிகை அருகே சென்றபோது, இவர்களுக்கு பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென வழிமறித்தனர். இதனால் மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் நிறுத்தினார். அப்போது 2 பேர் கார்த்திகேயனை தாக்கியதுடன் அவரை பிடித்து கொண்டனர். மற்ற 2 பேர் வினோதினியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். பின்பு 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கார்த்திகேயன் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற 4 பேரை தேடி வருகிறார்.
Average Rating