திண்டுக்கல்: பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை கடித்த வெறி நாய்!!
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணைப்பட்டியில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சிஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. சுமார் 180 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த வெறி நாய் மாணவ, மாணவியர்களை விரட்டி உள்ளது. சத்துணவுடன் தட்டுகளை ஏந்தி வந்த மாணவர்கள் அலறி அடித்து கொண்டு பள்ளி வளாகத்திற்கு ஓடியுள்ளனர்.
இந்த வெறிநாய் மாணவ– மாணவிகளை துரத்தி துரத்தி கடித்து குதறியது. கருப்பசேர்வைகாரன்பட்டி ஆசைத்தம்பி மகள் கவுசிகா (10), டி.பண்ணைப்பட்டியை சேர்ந்த வெற்றி மகன் புகழேந்தி (8), நாட்ராயன் மகன் பிரவீன் (8) ஆகிய மாணவ, மாணவியர்கள் உட்பட 5 மாணவர்கள் வெறி நாய் கடிக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் பள்ளிக்குள் இருந்த மாணவ– மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடிதது உள்ளனர். நாய்கடி பட்டவர்கள் அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பள்ளிக்குள் புகுந்து நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating