சின்னாளபட்டி அருகே முன்விரோதத்தில் தாக்கியவர் மீது போலீசில் புகார்!!
Read Time:57 Second
சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டி பூண்டிமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அந்தோணி, அருள்ஆனந்த், அருளானந்தம் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து பாஸ்கரை தாக்கினர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த பாஸ்கரின் தம்பி பவுன்ராஜ்(23) சத்தம்போட்டு சண்டையை விலக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பவுன்ராஜையும் தாக்கினர். பலத்த காயமடைந்த அவர் சின்னாளபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating