விடுதியில் தங்கி படிக்க விரும்பாததால் ஓட்டம்: பிளஸ்–2 மாணவர் திருப்பதியில் மீட்பு!!
Read Time:56 Second
திருக்கோவிலூர் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். இவரது மகன் ரவிச்சந்திரன் (17) பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
கடந்த 2–ந் தேதி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு தந்தையுடன் வந்தபோது திடீரென ரவிச்சந்திரன் ஓட்டம் பிடித்தார். விசாரணையில் அவர் திருப்பதியில் தங்கி இருப்பது தெரிந்தது. அவரை கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மீட்டனர். விடுதியில் தங்கி படிக்க விரும்பாததால் ஓட்டம் பிடித்ததாக ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
Average Rating