திண்டுக்கல் அருகே மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!
Read Time:1 Minute, 12 Second
திண்டுக்கல் அருகே என். கோவில்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மகன் சரவணன். (வயது 22). இவருக்கும் கன்னிவாடி கோனூரை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் நிலக்கோட்டையில் நடைபெற இருந்தது. இதையொட்டி இருவீட்டாரின் உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர்.
இந்த தகவல் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ரேணுகா மற்றும் போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் உடனடியாக மண்டபத்துக்கு விரைந்தனர்.
அப்போது மணப்பெண்ணின் வயது சான்றிதழை வாங்கி சரிபார்த்தனர். அதில் அவருக்கு 17 வயதே ஆகிறது என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் இந்த திருமண விழா நிச்சயதார்த்த நிகழ்ச்சியாக நடந்தது.
Average Rating