புதையல் இருப்பதாக கருதி நரபலி கொடுக்க வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது!!
ஆந்திர மாநிலம் கேட் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். அவரது மகன் உதயகுமார் (வயது 22). பட்டதாரி. இவர், அவரது நண்பர்களுடன் சம்பவத்தன்று வெளியே சென்றார்.
அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உதயகுமாரின் பெற்றோர் கார்வேட்டி நகர போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த உதயகுமாரின் நண்பர்கள் ரமேஷ், சிரஞ்சீவி உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கூறியதாவது:–
உதயகுமாரை நாங்கள் (நண்பர்கள்) கார்வேட்டி நகர மண்டலம் நிஷம் துர்கா என்ற இடத்திற்கு அழைத்து சென்றோம். அங்கு நாங்கள் 4 பேரும் சேர்ந்து மது அருந்தினோம். பின்னர் அருகில் உள்ள பழமையான கோட்டை என்ற இடத்துக்கு சென்றோம். அங்கு புதையல் இருப்பதாக எங்களுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது. இதனால் தான் நாங்கள் 4 பேரும் அங்கே சென்றோம்.
இதனையடுத்து புதையல் தோண்ட வேண்டும் என்றால் முதலில் யாரவது ஒருவரை பலி கொடுக்க வேண்டும் என்று எண்ணினோம். இதனால் உதயகுமாரை கழுத்தை அறுத்துக்கொலை செய்து, மலையில் இருந்து உடலை தூக்கி வீசினோம். பின்னர் பயந்து போன நாங்கள் 3 பேரும் அங்கிருந்து வந்துவிட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு அவர்களை அழைத்து சென்று, உதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating