மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி சாய்த்த தொழிலாளி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!
சங்கரன்கோவில் காமராஜ் நகரை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 38). மேட்சியாபுரத்தை சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவரது மனைவி மனோன்மணி. இவருக்கும், மாரியப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
இதையறிந்த குபேந்திரன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக குபேந்திரன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மனைவியை விவாகரத்து செய்தார்.
சம்பவத்தன்று மாரியப்பன் சங்கரன்கோவில் தேவிபட்டினம் தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த குபேந்திரன், மாரியப்பனிடம் உன்னால்தான் என் வாழ்க்கை சீரழிந்து விட்டது. உன்னை உயிரோடு விடமாட்டேன் எனக்கூறி தனது நண்பர்களான மதி, செல்வராஜ் ஆகியோருடன் சேர்ந்து மாரியப்பனை சரமாரி அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் படுகாயமடைந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சங்கரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த குபேந்திரன், மதி, செல்வராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating