மனைவி, மகள், தாயை குத்திக் கொன்ற சைக்கோ: கழிவறையில் புகுந்து மூத்த மகள் தப்பினார்!!
ஐதராபாத் அருகே உள்ள பாலாப்பூர் கிராமம் சாய்நகரைச் சேர்ந்தவர் ராமரெட்டி. விவசாயியான இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
புதிதாக கட்டப்பட்ட வீட்டில் கீழ்தளத்தில் ராம்ரெட்டி குடும்பமும், மாடியில் அவரது அண்ணனும் குடியிருந்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு வீட்டின் ஒரு அறையில் ராம்ரெட்டி வீட்டின் ஒரு அறையில் மனைவி தாயுடனும் 2 மகள்கள் இன்னொரு அறையிலும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
அதிகாலையில் எழுந்த ராம்ரெட்டி கத்தியால் தாய் சுப்தரா (65), மனைவி ராதிகா (45) ஆகியோர் குத்திக் கொன்றார்.
பின்னர் மகள்கள் தூங்கிக் கொண்டு இருந்த அறைக்கதவை தட்டினார். இளைய மகள் அட்சயா (17) கதவை திறந்தார். உடனே அவரையும் கத்தியால் குத்திக் கொன்றார்.
இதைப் பார்த்த மூத்த மகள் கழிவறைக்குள் புகுந்து பூட்டிக் கொண்டார். ராம் ரெட்டி நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அவள் உயிர் தப்பினார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு மாடியில் இருந்து அவரது அண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ராம்ரெட்டியை பிடிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்து தப்பிய ராம்ரெட்டி அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
போலீசாரும் மற்றவர்களும் அவரை மீட்டு கைது செய்தனர்.
ராம்ரெட்டி சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சைக்கோ போல் இருந்தார். ஆனால் இப்படி 3 பேரையும் கொடூரமாக கொலை செய்வார் என நினைக்கவில்லை என்று அவரது உறவினர்கள் கூறினார்கள்.
Average Rating