பேஸ்புக் மூலமாக பழகி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபன் கைது!!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் போலீஸ் அதிகாரியின் மகன் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகானி கேட் பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு, சில வருடங்களுக்கு முன்பாக பேஸ்புக் மூலமாக அறிமுகமான அந்த வாலிபன், கோவிந்தபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அம்மாணவியை வரச் செய்துள்ளான். தக்க சமயம் பார்த்து மாணவிக்கு தெரியாமல் போதை மருந்தை கலந்து கொடுத்த அந்த வாலிபன், மயங்கி விழுந்த மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்தக் கொடூரத்தை வீடியோ எடுத்து இதை யாரிடமாவது சொன்னால் வீடியோவை எம்.எம்.எஸ் -இல் வீடியோவை வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளான்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைக் கூற, அவரது குடும்பத்தினர் கடந்த புதன் கிழமை அன்று போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட அந்த போலீஸ் அதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
Average Rating