தந்தையுடன் நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே தூங்கிய 1½ வயது சிறுவனை கடத்திய பெண் சிக்கினார்!!
வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 1½ வயதில் கோகுல், கோவர்தன் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு கோகுலுடன் சுரேஷ் வீட்டுக்கு வெளியேயும் கோவர்தனுடன் மைதிலி வீட்டுக்குள்ளேயும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.
நள்ளிரவில் திடீரென அந்த பகுதியில் நாய்கள் சத்தமிட்டு குரைத்தன. திடுக்கிட்டு சுரேஷ் எழுந்தார். அருகில் படுத்திருந்த கோகுலை பார்த்தார். காணவில்லை.
அதிர்ச்சியடைந்த அவர் அங்குமிங்கும் தேடினார். பின்னர் நாய் குரைத்த பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது கோகுலை ஒரு பெண் கடத்தி செல்வதையும் அந்த பெண்ணை நாய்கள் கடித்தபடி விரட்டுவதையும் பார்த்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட்டு அபயக்குரல் எழுப்பினார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் அந்த பெண்ணை விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அந்த பெண்ணிடம் இருந்து சிறுவனை மீட்டனர். பின்னர் அந்த பெண் ஆலங்காயம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அந்த பெண்ணை கொண்டு சென்றனர்.
அங்கு சப்–இன்ஸ்பெக்டர் வளர்மதி விசாரணை நடத்தி வருகிறார். அந்த பெண் தெலுங்கில் பேசுகிறார். அவர் தனக்கு ஆம்பூர் என்றும் ஆந்திர மாநிலம் குப்பம் என்றும், தனது பெயர் அம்மு என்றும், அலமேலு என்றும் மாற்றி மாற்றி பேசுகிறார். எனவே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating