கூட்டமைப்பைத் தவிர எந்தக் கட்சியிலும் போட்டியிடமாட்டேன்!!
Read Time:1 Minute, 13 Second
ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் போட்டியிட மாட்டேன் என சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் வேட்புமனுவில் கையொப்பமிடும் இடமான மகாவலி நிலையத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.
எனினும் தான் இன்னும் வேட்புமனுவில் கையொப்பம் இடவில்லை என்று அததெரணவிற்கு அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வேட்புமனு கிடைக்காவிட்டால் எந்தக் கட்சியில் போட்டியிடுவீர் என்று அவரிடம் வினவப்பட்ட போது, அவ்வாறான நிலை ஏற்பட்டால் வீட்டில் இருப்பேன் என பதிலளித்தார்.
Average Rating