காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தலை புறக்கணிப்பு!!
திருகோணமலை மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் தலைமைகள் மீதான அதிருப்தியின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்கிழமையன்று, திருகோணமலை சிவன் கோவில் முன்பாக, மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிப்பு, பாதுகாப்பு போன்ற விடயங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் செயல்பாடுகள் மீதான அதிருப்தி ஆகியவற்றின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கூறுகின்றது.
இது தொடர்பாக தமிழ் அரசியல் தலைமைகள் மீது தொடர்ந்தும் தாங்கள் நம்பிக்கை கொள்ளத் தயாராக இல்லை என இந்தச் சங்கத்தின் தலைவியான ஜெயலட்சுமி தேவி நாகேந்திரன் தெரிவித்தார்.
ஆனால், இந்த தீர்மானத்தில் தமிழ் அரசியல் கட்சியொன்றின் பின்புலம் இருப்பதாக சிலர் கூறினாலும், தங்களது இந்த தீர்மானம் பற்றி தமிழ் அரசியல் தலைமைகளுக்கோ தமிழ் கட்சிகளுக்கோ முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய தேவை தமக்கு இல்லை என்று ஜெயலட்சுமி தேவி கூறினார்.
இந்த முடிவின் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் சில வேளை தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகவோ, குறையவோ செய்யலாம் என சுட்டிக்காட்டப்படுவது பற்றி அவரிடம் கேட்டபோது, தமிழர் பிரதிநிதிகள் இருந்தும் இதுவரை எதுவும் நடந்ததாக இல்லை என தனது பதிலில் அவர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating