புதுப்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது…!!
Read Time:1 Minute, 10 Second
தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் அடையாறில் செல்போன் கடை வைத்து உள்ளார்.
இவருக்கும் பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டனை சேர்ந்த காளிச்செல்விக்கும் (வயது30) கடந்த 10 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காளிச்செல்வி வீட்டில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காளிச்செல்வியின் தாய் தங்கேஸ்வரி, தண்டையார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால கிருஷ்ணனை கைது செய்தனர்.
அவர் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
Average Rating