மகனை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்…!!

Read Time:1 Minute, 16 Second

534a8a14b6d51பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது.
இது தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை முற்றுகையிடுமாறு முதலமைச்சர் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறித்த இடத்தை முற்றுகையிட்ட மேல் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரான பாடசாலை அதிபரையும் பெண்ணையும் தமது பொறுப்பில் எடுத்து, அவர்களை ஹொரணை வலய கல்வி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளது. அத்துடன் அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (படங்கள்) விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்…!!
Next post சர்க்கரையும், ஆல்கஹாலும் இல்லாத வாழ்வு எப்படியிருக்கும்?: வீடியோ இணைப்பு…!!