பிடிக்கவில்லை என்று கூறிய மகள்… எமனாக மாறிய தந்தை: சவுதியில் கொடூர சம்பவம்…!!
“உன்னை பிடிக்கவில்லை” என்று கூறிய மகளை அடித்துக்கொன்ற தந்தையின் வெறிச்செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஈத் அல் ஆதா நகரை சேர்ந்த சிறுமி யாராவின்(7) தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அறிவுரையின் பேரில் யாரா தனது தந்தையுடன் கடந்த 3 மாதங்களாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தந்தை, யாராவைப் பார்த்து உனக்கு என்னைப்பிடித்துள்ளதா, என்மேல் அன்பு உள்ளதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு யாரவோ எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று பதில் கூறியுள்ளார், இதனால் கோபம் கொண்ட தந்தை, ஏர் கண்டிஷன் பைப்பை எடுத்து யாராவின் தலையில் தாக்கியதில், அவளது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே யாரா உயிரிழந்துள்ளாள்.
தற்போது, யாராவின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர், அவர் தனது வாக்குமூலத்தில், எனது மகளுக்கு தக்க பாடம் புகட்ட விரும்பியதால் இப்படியொரு காரியத்தை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
தற்போது இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating