சாலையில் திடீரென தனக்கு தானே தீ வைத்து கொண்ட நபரால் பரபரப்பு…!!
Read Time:1 Minute, 19 Second
பாகிஸ்தானில் நபரொருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு வீதியில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் முல்நான் நகரைச் சேர்ந்தவர் ஷஹ்பாஸ் அகமத்.
இவர் நகரின் முக்கிய சாலை ஒன்றில் தனது உடலில் தீ வைத்தவாறு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சாலையில் சென்ற இவரை பார்த்த பொது மக்களில் சிலர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
உடலில் 80 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating