தாயை அடித்து சித்ரவதை செய்த மகன்: 3 ஆண்டுகள் சிறையில் அடைத்த நீதிமன்றம்…!!
Read Time:1 Minute, 14 Second
சிங்கப்பூரில் தாயை அடித்து சித்ரவதை செய்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசிப்பவர் ராஜேஷ் பன்னு(32), இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது, இவரது தாயார் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் கோபம் கொண்ட ராஜேஷ், தனது தாயை கீழே தள்ளிவிட்டு, அவரது நெற்றியில் பிளாஸ்டிக் குவளையால் அடித்தார், மேலும் துடைப்பத்தால் சரமாரியாக தாக்கியதில் தாயார் மயங்கி விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து தாயார் அளித்த புகாரின் படி, ராஜேஷை பொலிசார் கைது செய்து,சிறையில் அடைத்தனர். விசாரணையில், ராஜேஷை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
Average Rating