ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: வாலிபர் கைது…!!

Read Time:1 Minute, 34 Second

94ce785f-7aca-4b6a-9a51-42571c816eb0_S_secvpfதிருவண்ணாமலை ஆரணியை சேர்ந்தவர் அல்லி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்தார்.

அதில், எனது மகன் மற்றும் பலருக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ஜமீன் பல்லாவரம் தர்காசாலையை சேர்ந்த தீபாகரன் பணம் வாங்கி ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தீபாகரன் 17 பேரிடம் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.32 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தீபாகரனை போலீசார் கைது செய்தனர். தீபாகரனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம். எம்.ஏ. படித்துள்ள இவர் பழவந்தாங்கலில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

பணம் சம்பாதிக்கும் ஆசையில் ரெயில்வே துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்காளதேசத்தில் இத்தாலியர் கொலை தொடர்பாக 4 பேர் கைது…!!
Next post எழும்பூரில் டிராவல்ஸ் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து…!!