எழும்பூரில் டிராவல்ஸ் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து…!!
Read Time:57 Second
சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி (50). டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் எழும்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வயிற்றில் கத்தியால் குத்தியது. இதில் அவர் காயத்துடன் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டிராவல்ஸ் நிறுவனத்தின் கூலி தொழிலாளிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating