கொல்கத்தா ரெயிலில் தீ விபத்து…!!
Read Time:57 Second
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. சந்தன்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்ற போது திடீர் என்று ரெயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக ரெயில் சந்தன்பூரில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுப்படுத்தப்பட்டது. முன்னதாக அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் அவசரமாக இறக்கப்பட்டதால் உயிர்ச் சேதம் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
Average Rating