சித்தப்பாவை கொலை செய்து மணப்பெண்ணை கடத்தியவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்…!!
வாலாஜா காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(40). பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா(30). இவர்களது மகள் லாவண்யா (19)வுக்கும் வாலாஜா வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 26ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 4 பேர் ஆறுமுகத்தின் வீட்டிற்குள் புகுந்து லாவண்யாவை காரில் கடத்தி சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த லாவண்யாவின் சித்தப்பா சிவக்குமார் (35) அந்த காரின் மேல் பகுதியில் ஏறிக் கொண்டார்.
பின்னர் சிவக்குமார் காருக்குள் சென்று லாவண்யாவை மீட்க போராடினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ரத்தினகிரி வந்தபோது சிவக்குமாரை காரில் இருந்து கீழே தள்ளினர். இதில் படுகாயமடைந்த சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட லாவண்யா மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில் கடத்ததலுக்கு பயன்படுத்திய காரை பெங்களூருவில் மீட்டனர். இதையடுத்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களின் செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் குற்றவாளிகளின் செல்போன் சுவிட்ச் ஆப் செயய்யப்பட்டுள்ளன. அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக கடத்தல் கும்பல் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating