தண்டையார்பேட்டையில் போலீஸ் கமிஷனர் அலுவலக ஊழியர் அடித்து கொலை…?
தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 1–வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (56). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஊழியாக வேலை பார்த்து வந்தார். நேற்று ஆறுமுகம் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர் வெளியே சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார். நள்ளிரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் ஆறுமுகம் எண்ணூர் நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர் அருகே சாலை ஓரத்தில் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதாக ஆர்.கே.நகர் போலீசுக்கு தகவல் வந்தது.
உடனே உதவி கமிஷனர் தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் விரைந்து சென்று ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.
இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆறுமுகத்தை யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது நடக்கும்போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating