அம்பத்தூரில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்…!!
Read Time:1 Minute, 3 Second
சென்னை அம்பத்தூர் கே.கே. ரோடு 12–வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மீனாட்சி (வயது 35). இவர்களுக்கு நந்தினி (13) என்ற மகளும், ஸ்ரீராம் (10) என்ற மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று மீனாட்சி அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கணவரிடம் கூறி விட்டு குழந்தைகளுடன் சென்றார். அதன் பிறகு அவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக நாகராஜன் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாட்சி, நந்தினி, ஸ்ரீராம் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
Average Rating