ஆபாச இணையத்தளங்களை தடைசெய்ய நடவடிக்கை..!!
Read Time:1 Minute, 14 Second
ஆபாச இணையத்தளங்களை தடைசெய்வதற்காக, பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டில் அதிகரித்துவரும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள், துஷ்பிரயோக சம்பவங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணமென, ஆலோசனைகள் மற்றும் நல்லிணக்கச் சபையின் செயலாளர் மஹீல் டோல் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆபாச இணையத்தளங்களை முடக்குமாறு கோரும் மனுவில், எதிர்வரும் 4ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
அதனையடுத்து மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
Average Rating