படகுகளுக்கு தீ வைப்பு…!!
Read Time:53 Second
ஹிக்கடுவ – பெருலிய கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மீனவ படகுகளுக்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.
இதில் ஒரு படகு முற்றாக சேதமடைந்துள்ளது.
ஏனைய இரண்டு படகுகளும் பகுதி அளவில் பாதித்துள்ளன.
அதேநேரம் இந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் கைவிட்டுச் செல்லப்பட்டிருந்த உந்துருளி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரையில் யாரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை.
காவற்தறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating