துரைப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டிட காவலாளி அடித்து கொலை- கொள்ளையர்கள் கைவரிசை?

Read Time:1 Minute, 16 Second

02474ac0-eb7d-4360-bab3-6445bcb10d7d_S_secvpfதுரைப்பாக்கம் அருகே ராஜீவ்காந்தி சாலையில் உள்ள உக்கியம்பேட்டையில் 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணி கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை.

இதனால் அங்கிருந்த கட்டுமான பொருட்கள் திருடப்பட்டு வந்தது. இதை தடுப்பதற்காக வேளச்சேரி பாலாஜி அவென்யூவை சேர்ந்த சீனிவாசன் (47) என்பவர் காவல் பணியில் நியமிக்கப்பட்டார்.

இன்று காலை கட்டிடத்தின் கீழ் தளத்தில் சீனிவாசன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது முகம், கை, கால்களில் ரத்த காயங்கள் இருந்தன. அவரை யாரோ உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து இருக்கிறார்கள். கொலையாளி யார் என்று தெரியவில்லை.

கொள்ளையடிக்க வந்தவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து கண்ணகிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அண்ணனை குடும்பத்தோடு கொல்ல முயற்சி: உறவினர்கள் திரண்டதால் தம்பி தீக்குளிப்பு…!!
Next post சனி கிரகத்தின் சந்திரனில் கடல்: நாசா விண்கலம் கண்டுபிடிப்பு…!!