அண்ணனை குடும்பத்தோடு கொல்ல முயற்சி: உறவினர்கள் திரண்டதால் தம்பி தீக்குளிப்பு…!!

Read Time:1 Minute, 48 Second

f51c1ea8-ef0e-4e9a-96c5-9a91cd4acb9d_S_secvpfஅயனாவரம் குருசாமி தெருவில் வசித்து வருபவர் தாண்டவமூர்த்தி துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பி சீனிவாசனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு தாண்டமூர்த்தி மனைவி நளினி மற்றும் 3 வயது பேரனுடன் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் அறையின் ஜன்னல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு தாண்டவமூர்த்தி எழுந்தார்.

அப்போது தம்பி சீனிவாசன் உடைந்த ஜன்னல் வழியே மண்எண்ணையை ஊற்றி தீ வைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உஷாரான தாண்டவமூர்த்தி மனைவி மற்றும் பேரனை அறையில் இருந்து வெளியேற்றி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு கீழ் தளத்தில் வசிக்கும் உறவினர்கள் திரண்டு வந்து அறையில் பிடித்த தீயை அணைத்தனர். இதனால் பயந்துபோன சீனிவாசன் திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவவாஜ், சப்–இன்ஸ்பெக்டர் மகேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புரசைவாக்கம் சீர்திருத்த பள்ளியில் இருந்து 8 சிறுவர்கள் தப்பி ஓட்டம்…!!
Next post துரைப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டிட காவலாளி அடித்து கொலை- கொள்ளையர்கள் கைவரிசை?