லண்டனில் பசவேஸ்வரர் சிலையை திறந்து வைத்தார் மோடி…!!
Read Time:1 Minute, 18 Second
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, லண்டனில் இந்திய தத்துவஞானியான பசவேஸ்வரரின் சிலையை இன்று திறந்து வைத்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று லண்டனில் நிறுவப்பட்டுள்ள இந்திய தத்துவஞானியும், கவிஞருமான பசவேஸ்வரரின் சிலையை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய மோடி, 12ம் நுற்றாண்டிலேயே உலகிற்கு ஜனநாயக கொள்கைகளை கொடுத்தவர் பசவேஸ்வரர்.
இந்த சிலையானது ஜனநாயக கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் உத்வேகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சமூக புரட்சியாளரான பசவேஸ்வரர் அடிமைத்தனத்தையும், தீண்டாமையையும் எதிர்த்து முதல்முறையாக 12ம் நூற்றாண்டிலேயே குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating