27 வருடங்களுக்கு பின் ‘சோட்டா’ ராஜனை சந்தித்த சகோதரிகள்..!!

Read Time:1 Minute, 44 Second

chotta_rajan_0022-615x463சிபிஐ விசாரணை கைதி சோட்டா ராஜனை 27 வருடங்களுக்கு அவரது சகோதரிகள் சந்தித்துள்ளனர்.
வட இந்தியாவில் தீபாவளியை தொடர்ந்து நேற்று, சகோதரன் நலனுக்காக சகோதரிகள் பூஜை செய்யும் ‘பாய் தோஜ்’ பண்டிக்கை கொண்டாடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பண்டிக்கைக்காக தன் சகோதரனை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று டெல்லி நீதிமன்ற நீதிபதியிடம் சோட்டா ராஜனின் சகோதரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்டதை அடுத்து, சோட்டா ராஜனின் மூத்த சகோதரியான மாலினி சக்பால், இளைய சகோதரியான சுனிதா சாக்காராம் சவான் நேற்று மாலை ராஜனை சந்தித்துள்ளனர்.

சுமார் பத்து நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், ராஜனை அரவணைத்த அவரது சகோதரிகள், கண்ணீர் மல்க நலம் விசாரித்துள்ளனர்.

பாலியில் கைதாகி இந்தியா கொண்டு வரப்பட்ட சோட்டா ராஜன், கடந்த நவம்பர் 7 முதல் 10 நாட்களாக சிபிஐயின் விசாரணை கைதியாக உள்ளார்.

இவர் மீது மும்பையில் 20 கொலை வழக்குகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் மும்பையின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்க்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் விமானத்திற்கு டுவிட்டரில் வெடிகுண்டு மிரட்டல் : பயணிகள் வெளியேற்றம்..!!
Next post சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: 28 பேர் மாயம்..!!