தேனி அருகே கோபித்து கொண்டு தாய் வீடு சென்ற மனைவிக்கு மறுமணம்: கணவர் அதிர்ச்சி…!!

Read Time:2 Minute, 41 Second

a3b5df5d-d10a-40b4-876c-cca65aaf9961_S_secvpfதேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பவுனப்பன் மகன் முருகன். இவர் தேனி என்.ஆர்.டி. நகர் பாரதி மெயின் ரோட்டைச் சேர்ந்த அசோகன் என்பவரது மகள் சுகன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணத்துக்கு சுகன்யாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி அவர்கள் திருமணம் செய்தனர்.

சிறிது காலம் சந்தோசமாக இருந்த அவர்கள் இல்லற வாழ்வில் பிரச்சினை தலை தூக்கியது. கணவன்–மனைவி 2 பேருக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இந்த கருத்து வேறுபாட்டால் சுகன்யா கடந்த 2012–ம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து பலமுறை முருகன் மனைவி வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்த தன்னுடன் வருமாறு அழைத்தார். அவர் சம்மதிக்கவில்லை. மேலும் சுகன்யாவின் பெற்றோர் முருகனை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வேலை முடிந்து வீடு திரும்பிய முருகனை வழிமறித்து சுகன்யாவின் தந்தை அசோகன் உள்பட 5 பேர் தாக்கியுள்ளனர். அதன் பின்னர்தான் தனது மனைவி சுகன்யாவை குட்டி மணி என்பவருக்கு மறுமணம் செய்து கொடுத்திருப்பது முருகனுக்கு தெரிய வந்தது. இதனையறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இத குறித்து முருகன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். நீதிபதி உத்தரவின் பேரில் தேனி மகளிர் போலீசார் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி சுகன்யா, அவரது புதிய கணவர் குட்டி மணி, தந்தை அசோகன், மற்றும் உறவினர்கள் முத்துலெட்சுமி, பிரியா, சுந்தர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏமனில் ராணுவ நிலைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 15 வீரர்கள் பலி…!!
Next post நெல்லையில் வாட்ஸ்அப்பில் ஆபாச படம் பரவியதால் பெண் தீக்குளித்து சாவு: பக்கத்து வீட்டு தம்பதி கைது…!!