திருந்தி வாழ்வதாக கூறி விட்டு வாலிபரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது…!!

Read Time:1 Minute, 53 Second

49953601-d7d2-49c6-86fd-0496b512d17e_S_secvpfசேலம் சின்ன திருப்பதி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் கண்ணன் (வயது 38). இவர் நேற்று மாலை அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் நடந்து வந்த போது கன்னங்குறிச்சி ராமநாதபுரம் முதல் தெருவைச் சேர்ந்த கவுஸ்பாட்சா என்பவரின் மகன் சிக்கந்தர் கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.

இது குறித்து கண்ணன் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பால்பாண்டி வழக்கு பதிவு செய்து இன்று காலை சிக்கந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைதான சிக்கந்தர் பிரபல ரவுடி ஆவார். இவரது பெயர் ரவுடி பட்டியலில் கடந்த 2011–ம் ஆண்டு இடம் பெற்றது.

இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் சேலம் டவுன், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, ஆகிய போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இதற்கு முன்பு சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் இருந்த போது சிக்கந்தர் திருந்தி வாழ்வதாக கூறி விட்டு சென்றவர் தற்போது புதிய கமிஷனர் வந்தவுடன் வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்று கைதாகி உள்ளார். இவருக்கு வேறு ஏதவாது வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்று கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் பால்பாண்டி விசாரித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லையில் வாட்ஸ்அப்பில் ஆபாச படம் பரவியதால் பெண் தீக்குளித்து சாவு: பக்கத்து வீட்டு தம்பதி கைது…!!
Next post நடிகர் வடிவேலு நேரில் ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு…!!