துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…!!
Read Time:56 Second
மாரவில – முதுகடுவ பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, உணவகத்தில் இருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என நம்புவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாரால் எந்த வகை துப்பாக்கி பிரயோகித்துள்ளனர் என இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மாரவில பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating