அரசியல் கைதிகளுக்காக கொக்குவில் இந்துக் கல்லுாரி மாணவன் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை..!! (படங்கள்)

Read Time:1 Minute, 53 Second

12308637_459052470966652_7686916628162432960_nஅரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கடிதத்துடன் மாணவன் இன்று தற்கொலை செய்தமை குறித்து மக்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்ற ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று (26) காலை ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இம்மாணவன் தனியாக வந்தாரா அல்லது வேறு யாராவது கூட்டி வந்து தள்ளி விட்டனரா என்கின்ற விசாரணை தற்போது பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவரது சடலத்திற்கு அருகில் காணப்பட்ட கொப்பி ஒன்றில் காணப்பட்டுள்ள கடிதம் தொடர்பாக சந்தேகம் நிலவுகின்றது. இக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் குறித்த மாணவரது கையெழுத்து அல்ல எனவும்,இவரை யாராவது தூண்டிவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. சடலம் நீதவான் விசாரணக்காக குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். href=”https://www.nitharsanam.net/103356/news/103356.html/attachment/78b5b100-4766-47f2-9573-997a14950e94″ rel=”attachment wp-att-103358″>78b5b100-4766-47f2-9573-997a14950e94 157be5d8-25bf-444f-9664-81698b148c4c b8d1a766-0cd7-4322-bb76-c5bacd5dcfa1 e8921040-2491-4aa0-9681-68e124b5feb9

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழங்குடியின மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது…!!
Next post க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில்..!!