செல்பீ பிடித்துக்கொண்ட எலி…!!
Read Time:59 Second
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் உறக்கத்திலிருந்தபோது அவரின் செல்லிடத் தொலைபேசியை எடுத்த எலியொன்று “செல்பீ” படம் பிடித்துள்ளது.
நியூயோர்க்கிலுள்ள ரயில் நிலையமொன்றின் தரையில் இந்நபர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எலியொன்று அந்நபரின் மீது ஏறிச்சென்று அவரின் செல்லிடத் தொலைபேசி எடுத்துக்கொண்டது.
பின்னர் அந்நபர் எலி கீச்சிடும் சத்தம் கேட்டு விழித்தபோது, தனது செல்லிட தொலைபேசி எலியின் வசம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
எலியை துரத்திவிட்டு தனது தொலைபேசியை ஆராய்ந்தபோது அதில் எலியின் செல்பீ படமொன்று இருந்தது.
Average Rating