வீட்டுவேலையை பூர்த்தி செய்யாத வளர்ப்பு மகனை தாக்கிய பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனை..!!
பாடசாலையில் வழங்கப்பட்ட வீட்டுவேலைகளை பூர்த்திசெய்யாத மாணவன் ஒருவனை கடுமையாக தாக்கிய அச்சிறுவனின் வளர்ப்புத் தாய்க்கு சீன நீதிமன்றமொன்று 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த லீ எனும் இப்பெண், தனது 9 வயதான வளர்ப்பு மகனை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
காயங்களுடன் காணப்படும் அச்சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வெளியானதையடுத்து லீ கைது செய்யப்பட்டார்.
பாடசாலையில் கொடுக்கப்பட்ட வீட்டுவேலைகளை தனது மகன் பூர்த்தி செய்யாததாலும் பொய் கூறியதாலும் அவனை தான் கயிற்றினால் தாக்கியதாக நீதிமன்றத்தில் அப்பெண் ஒப்புக்கொண்டார்.
தான் ஒரு மோசமான தாய் அல்ல என அவர் கூறினார்.
எனினும், அப்பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், மேற்படி சிறுவனை அவனின் குடும்பத்தினரிடம் மீள ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.
“மகனின் மீது எவ்வளவு அன்பு, அக்கறை கொண்டிருந்தாலும், நீர் செய்த செயலுக்கான விளைவை எதிர்கொள்ள வேண்டும்” என அப்பெண்ணிடம் நீதிபதி கூறினார்.
Average Rating