நுவரெலியாவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!
Read Time:1 Minute, 17 Second
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று 27.11.2015 அன்று மாலை 3.50 மணியளவில் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் சாரதியும் சக ஊழியரும் சென்றுள்ளனர். விபத்தின்போது சக ஊழியர் படுங்காயம்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
லொறியை வேகமாக செலுத்தியதால் சாரதியினால் லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating