இத்தாலியின் முக்கிய நகரத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்…!!
இத்தாலியின் முக்கிய நகரமான ஜெனோவாவில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியானதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கடந்த வாரம் பாரிசின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 128 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு அமைப்பு விடுத்த எச்சரிகையை அடுத்து இத்தாலியின் பல இடங்களில் வெடிகுண்டு மற்றும் தீவிரவாதிகளை பிடிப்பதற்கான சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரோம் மற்றும் மிலன் நகரங்களில் பல ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும், கடந்த சில நாட்களாகவே இத்தாலியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இத்தாலியின் 6-வது பெரிய நகரமான ஜெனோவாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Average Rating